• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூன்று மாதங்களில் 500 பள்ளிகளில் அதிநவீன அறிவியல் ஆய்வுக் கூடம் கொண்டு வரப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

September 1, 2018 தண்டோரா குழு

மூன்று மாதங்களில் 500 பள்ளிகளில் அதிநவீன அறிவியல் ஆய்வுக் கூடம் கொண்டு வரப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் பள்ளியில், மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எல்.பி.வேலுமணி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்,

மாபெரும் புரட்சி ஏற்படுத்தி உள்ள உள்ள பாட திட்டம் மாற்றத்திற்கான முக்கிய காரணம் அக்குழுவின் குழு தலைவர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் கல்வி ஆர்வளர்களுக்கு பாராட்டை தெரிவித்தார். இது போல இந்த மாதம் முதல் வாரத்தில் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் 7, 8 10, 12 ஆகிய 8 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்ற செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், புதிதாக திறனாய்வு மேற்பாட்டிற்கான 12 பாட திட்டத்தை இணைக் உள்ளதாகவும், இதன் மூலம் 12 ஆம் வகுப்பு முடித்த உடன் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும் எனவும் மாணவர்கள் பல்வேறு ஆராய்ச்சி செய்ய உதவியாக 500 பள்ளிகளில் அட்டல் டிங்கர் லேப் எனப்படும், அதிநவீன அறிவியல் ஆய்வுக் கூடம் மத்திய மாநில அரசுகளின் முயற்சி மூலம் மூன்று மாதங்களில் கொண்டு வரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க