திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புதூரில் சின்னதம்பி யானைக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தினர்.
கோவை தடாகம் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த சின்னத்தம்பி யானையை வனத்துறையினர் பிடித்து பொள்ளாச்சி டாப் ஸ்லிப் வனப்பகுதியில் விட்டனர். ஆனால் சின்னத்தம்பி யானை 100 கி.மீ. தூரம் நடந்தே வந்து மீண்டும் உடுமலைக்குள் நுழைந்தது. கண்ணாடிபுத்தூர் என்ற ஊரில் கடந்த 6 நாட்களாக முகாமிட்டிருந்தது. எனினும் யாருக்கும் எவ்வித தொந்தரவையும் கொடுக்காமல் இருந்து வந்தது.
இதனிடையே சின்னதம்பியை கும்கியாக மாற்றக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் கும்கியானை உதவியுடன் சின்னதம்பியை பிடித்து வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் திட்டமிட்டனர். ஆனால் அந்த கும்கி யானையுடன், சின்னதம்பி யானை நண்பனாக பழகி விளையாடி வந்ததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதற்கிடையில், உடுமலை பகுதியில் சுற்றி வரும் சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும் சின்னத்தம்பியை பிடிக்கும் போது துன்புறுத்தவோ, காயப்படுத்தவோ கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, சின்னதம்பியை பிடிக்கும் பணிகள் நேற்று மீண்டும் தொடங்கியது.
கண்ணாடிப்புத்தூரில் சின்னதம்பி தஞ்சம் அடைந்துள்ள பகுதிக்கு அருகே பொக்லைன் இயந்திரம் வந்து செல்லும் வகையில் பாதை ஏற்படுத்தப்பட்டது. நேற்று பிற்பகல் 3 மணியளவில் யானை பிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3 மருத்துவர்களில் ஒரு மருத்துவர் வராததாலும், அதிகாரிகளிடமிருந்து முறையான உத்தரவு வராததாலும் யானையை பிடிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் கரும்பு தோப்பில் இருந்து வெளியே வந்த சின்னத்தம்பி யானைக்கு முதலில் ஊசியைக் மருத்துவர் அசோகன் செலுத்தினார்.ஆனால் அது தவறியது.இரண்டாவது ஊசியைக் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி தங்கராஜ் பன்னீர்சசெல்வம் செலுத்தினார். அது யானையின் பின்னங்காலில் செலுத்தப்பட்டது. தங்கராஜ் செலுத்த முயன்ற மூன்றாவதும் தவறியது. பின்னர் ஐந்தாவது முறையாக செலுத்திய மயக்க ஊசி யானை மீதுபட்டது. எனினும், சின்னத்தம்பி மீண்டும் காட்டுக்குள் சென்று விட்டது.
சின்னத்தம்பி யானையை பிடிக்க கரும்பு காட்டுக்குள் கலீம் மற்றும் சுயம்பு ஆகிய இரு கும்கி யானைகள் உடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குமரகுரு கல்வி நிறுவனங்களில் ‘அன்- கான்பிரான்ஸ் 2025’ எனும் தனித்துவம் கொண்ட கருத்தரங்கு நாளை துவக்கம்!
நோய் எதிர்ப்பு ஆற்றலை வலிமைப்படுத்தும் விதமாக நியூட்ரிலைட் டிரிப்பிள் புரட்டக்ட் ஆம்வே இந்தியா அறிமுகம்
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்