• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மு.இராமநாதனின் மறைவு ஒட்டு மொத்த திராவிட இயக்கத்திற்கும், தி.மு.கவிற்கும் ஏற்பட்ட பேரிழப்பு – ஸ்டாலின்

May 10, 2019 தண்டோரா குழு

கோவையில் திமுக முன்னாள் எம்.பி.ராமநாதனின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

கோவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , திமுக செயல் திட்ட உறுப்பினருமான மு.இராமநாதன் கடந்த இரு வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் மு.இராமநாதன் காலமானார். இந்நிலையில் மறைந்த முன்னாள் எம்.பி.ராமநாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது குடும்பத்தினருக்கும் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர்,

மு.இராமநாதனின் இழப்பு ஈடு செய்யமுடியாத இழப்பு. இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் மிசா காலம் வரை கலைஞரின் உத்திரவினை ஏற்று அனைத்து போராட்டங்களிலும் ஈடுபட்டவர். சட்டமேலவை, சட்டமன்றம் நாடாளுமன்றம் என மக்களின் பிரதிநிதியாக இருந்து மக்கள் பணியாற்றி இருக்கின்றார்.தி.மு.க வின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஓருவர். மு.ராமநாதன் திருமண நிகழ்ச்சி, மாநாடு, கலை நிகழ்ச்சி, கருத்தரங்கம் என அனைத்திலும் திராவிட இயக்க கருத்துகளை பரப்பியவர். இடைவிடாமல் 5 மணி நேரத்திற்கும் மேலாக பேசும் ஆற்றல் உடையவர்.திராவிட இயக்கத்தின், தி.மு.கவின் பல்கலைகழகமாகவும் இருந்தவர். இவரது மறைவு என்பது ஒட்டு மொத்த திராவிட இயக்கத்திற்கும், தி.மு.கவிற்கும் ஏற்பட்ட பேரிழப்பு ஆகும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன் எனக் கூறினார்.

மேலும், திமுக தலைமை நிலைய செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, சாமிநாதன், பொங்கலூர் பழனிச்சாமி உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க