• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்,தமிழக அரசுக்கு காலஅவகாசம்

July 15, 2017 தண்டோரா குழு

முல்லைப் பெரியாறு அணை விவகார வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க 3 வாரம் காலஅவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரளா அரசு அனுமதிக்கவில்லை. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின் போது கேரள அரசு தாக்கல் செய்த மனுவில், முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு அனுமதி வழங்க முடியாது. அணையை பராமரிக்கும் பணியை தமிழக அரசு மேற்கொள்ளக்கூடாது என்று தெரிவித்தது.

இதனால் தமிழகம் மற்றும் கேரளா அதிகாரிகள் இடையே விரோத போக்கு ஏற்பட்டது. இரு மாநில எல்லைகளிலும் மக்கள் பதற்றத்துடனே காணப்பட்டனர். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசின் மனு குறித்து பதில் அளிக்க தமிழக அரசு சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதிகள் தமிழக அரசு பதிலளிக்க 3 வாரம் காலஅவகாசம் அளித்தனர்.

மேலும் படிக்க