March 14, 2019
தண்டோரா குழு
மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய நடைமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள பயணிகள் மேம்பாலம் இன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. மாலை நேரத்தில் பயணிகள் நெரிசல் அதிகமாக இருக்கும் நேரத்தில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததால் பலர் காயமடைந்தனர்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் 3 பேர் உயரிழந்தனர். 34 பேர் காயம் காயமடைந்துள்ளனர். பாலம் இடிந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கிய உள்ளனர். தற்போது அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என மும்பை போலீசார் தெரிவித்தனர்.
பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாகவே பாலம் இடிந்து விழுந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தேரி மையத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தும்படி போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.