• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்வு

August 19, 2019 தண்டோரா குழு

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக இன்று தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிட்டார். அவர் ஜெய்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு பரிசீலனை செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. ஆனால் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடததால், இன்று அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்..
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கை எதிர்த்து பாஜக எந்தவொரு வேட்பாளரையும் நிறுத்தவில்லை. பாராளுமன்றத்தின் மேல் சபைக்கு மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், மாநிலங்களவை எம்.பி.மதன் லால் சைனியின் மரணத்தை அடுத்து, இந்த தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க