• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல் பெண் பவுன்சர்(கேளிக்கை விடுதி பாதுகாவலர்)!

July 15, 2017 தண்டோரா குழு

புதுதில்லியின் கேளிக்கை விடுதியில் ஒரு இளம்பெண் அதிரடி பாதுகாவலராக பணியாற்றி வருவது பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

புதுதில்லியில் உள்ள கேளிக்கை விடுதியில் ‘பௌன்சர்’ என்று அழைக்கப்படும் அதிரடி பாதுகாவலர்கள் பணியாற்றி வருவது வழக்கம். மேஹரூனிசா என்னும் இளம் பெண் பாரம்பரிய முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த அவர் ராணுவத்தில் அல்லது காவல்துறையில் சேரவேண்டும் என்று விருப்பம். ஆனால், அவருடைய கனவு நனவாகவில்லை. இதையடுத்து அந்த கேளிக்கை விடுதியில் பணியாற்றி வருகிறார்.

அந்த விடுதியின் மதுபான கூடத்தில் நடைபெறும் சண்டையை சமாளிப்பது, அங்கு வருவோரை சோதனை செய்யும்போது, போதை பொருட்களை இருப்பதை அறிந்தால், அவர்களை தடுத்து நிறுத்துவது போன்ற பணிகளை செய்து வருகிறார்.

அவருடைய 27 வயது சகோதரி தரனும் ஒரு அதிரடி பாதுகாவலர். மேஹரூனிசா பணி புரியும் விடுதிக்கு அருகில் அவருடைய சகோதரியும் பணிபுரிகிறார். இருவருக்கும் ஒரு மாதத்திற்கு 3௦,௦௦௦ ரூபாய் வருமானமும் கிடைக்கிறது. இருவரும் தங்கள் பணிகளில் சிறந்து விளங்குகின்றனர்.

விடுதிக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்று பெண் காவலர்களை பணியில் அமர்த்தினோம். அந்த பணிக்கு மேஹரூனிசா ஏற்ற ஒருவர் என்று அந்த விடுதியின் உரிமையாளர் தெரிவித்தார்.

மேலும் படிக்க