• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதல்வர் பதவியில் இருந்து விலகிய நிதிஷ்குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

July 26, 2017 தண்டோரா குழு

பீகார் முதல்வர் பதவியில் இருந்து விலகிய நிதிஷ்குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஊழல் புகாரில் சிக்கிய பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி விவகாரத்தில் ஒரு மித்த கருத்து எட்டாததால் முதல்வர் நிதிஷ் இன்று (ஜூலை 26) மாலை கவர்னர் கேசவ்நாத் திரிபாதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இந்நிலையில், நிதிஷ்குமார் ராஜினாமா செய்த சில மணித்துளிகளில், பிரதமர் நரேந்திரமோடி, அவரது முடிவை வரவேற்று, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்,

ஊழல், முறைகேடுகளுக்கு துணை போகாது, தீரத்துடன் முடிவெடுத்த நிதிஷ்குமாரின் நேர்மையை 125 கோடி இந்திய மக்களும் போற்றுவார்கள் என்றும் நாட்டின் ஊழலுக்கு எதிரான போரில் அரசியல் மாச்சரியங்களை கடந்து, நிதிஷ்குமார் பங்கேற்றிருப்பதை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க