• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதல்வர் உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் , குடிநீர் இணைப்பு துண்டிப்பு – மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

May 26, 2018 தண்டோரா குழு

முதல்வர் உத்தரவுப்படி ஆலைக்கான மின்சாரம் , குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோருடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஸ்டெர்லைட் ஆலை இயக்க அனுமதிக்க மாட்டோம் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆலை இயங்காமல் இருப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல்வர் உத்தரவுப்படி, ஆலைக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் காயமடைந்தவர்களில் 90 சதவீதம் பேர் அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் கருத்து குறித்து எதுவும் கூற விரும்பவில்லை. தற்போது ஆலை இயங்கவில்லை என்பது உறுதி.ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் காயமடைந்தவர்களில் 90 % பேர் அரசு மருத்துவமனையிலும் மற்றவர்கள் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தூத்துக்குடி நகரில் இயல்பு நிலை திரும்பி உள்ளது. பெட்ரோல் பங்க், வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என்றார்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் கருத்து குறித்து எதுவும் கூற விரும்பவில்லை. தற்போது ஆலை இயங்கவில்லை என்பது உறுதி என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

மேலும் படிக்க