• Download mobile app
23 Dec 2025, TuesdayEdition - 3604
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வராக பதவி ஏற்றவுடன் மூன்று மத போதகர்களிடம் ஆசீர்வாதம் பெற்ற ஜெகன்மோகன் ரெட்டி

May 30, 2019 தண்டோரா குழு

முதல்வராக பதிவு ஏற்ற ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு மேடையில் மூன்று மத குருக்கள்களிடன் ஆசீர்வாதம் பெற்றுகொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திராவில் உள்ள, 175 சட்டசபை தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், ஜெகன் மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்.காங்., 151 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. சந்திரபாபு நாயுடுவின், தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களை கைப்பற்றி படுதோல்வியை சந்தித்தது.நடிகர் பவன் கல்யாணின், ஜனசேனா, ஒரு தொகுதியில் வென்றது.

இதனையடுத்து, விஜயவாடாவில் நடந்த விழாவில் ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்று கொண்டார். அவருக்கு ஆந்திர ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஜெகன் மோகன் ரெட்டி மட்டுமே இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அமைச்சர்கள், ஜூன் 6 ம் தேதி பதவியேற்க உள்ளனர்.இந்த விழாவில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில்,பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் பதவியேற்பு மேடையில் கிருஸ்துவ பாதிரியார், இஸ்லாமிய குருக்கள் மற்றும் இந்து குருக்களிடமும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

மேலும் படிக்க