• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதலிரவுக்கு ஒத்துக்க மறுத்த மனைவியை அடித்து உதைத்த கணவர் மீது வழக்கு பதிவு

May 11, 2019 தண்டோரா குழு

டெல்லியில் முதலிரவுக்கு ஒத்துக்க மறுத்த மனைவியை அடித்து உதைத்த கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டில்லியை சேர்ந்த தர்மேந்திர சர்மா என்பவருக்கும் அமதாபாத்தை சேர்ந்த பிரியங்கா திவாரி என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. மணப்பெண் வீட்டில் இருவருக்கும் முதலிரவிற்கான ஏற்பாடுகள் நடந்தது. அப்போது,திருமண நாள் அன்று ஏற்பட்ட உடல் அலுப்பை காரணமாக முதலிரவின் போது சர்மாவுடன் உடலுறவு கொள்ள திவாரி சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சர்மா கடும் கோபமடைந்துள்ளார்.எனினும் அது தன்னுடையை மனைவியின் வீடு என்பதால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லைபொறுமையாக இருந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் திருமணமான ஜோடி டில்லிக்கு சர்மாவின் வீட்டிற்கு வந்தனர். அப்போது சர்மா தனது மனைவி திவாரியை முதலிரவு அன்று உடலுறவுக்கு ஒத்துழைக்காததை கூறிஅடித்து கொடுமைபடுத்தியுள்ளார். இதையடுத்து, திவாரி இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் தர்மேந்திர சர்மா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க