• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சர் பதவி விலகும் வரை பேரவை நிகழ்வுகளில் திமுக பங்கேற்காது- மு.க.ஸ்டாலின்

May 29, 2018 தண்டோரா குழு

முதலமைச்சர் பதவி விலகும் வரை பேரவை நிகழ்வுகளில் திமுக பங்கேற்காது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அப்போது,மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செ.மாதவன்,ஜெ.குரு உள்ளிட்ட 7 பேரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி பிரச்சனை குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க ஸ்டலின் கோரிக்கை வைத்து இருந்தார்.இந்த கோரிக்கையை விதி எண் 56–ன் கீழ் அவையை ஒத்திவைக்க வலியுறுத்தினார். அதற்கு தூத்துக்குடி பிரச்சனை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதால் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார்.இதையடுத்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின்,

முதலமைச்சரின் விளக்க அறிக்கையில் துப்பாக்கிச் சூடு என்கிற வார்த்தையே இல்லை.துப்பாக்கிச் சூடு என்கிற வார்த்தையை பயன்படுத்தாதது ஏன்?அமைச்சரவை கூட்டத்தை கூட்டி கொள்கை முடிவு எடுத்த பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் தான் அதற்கு பயனுண்டு.துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்ததற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக் கூறினார்.மேலும், முதலமைச்சர் பதவி விலகும் வரை அவை நடவடிக்கைகளில் தி.மு.க பங்கேற்காது என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க