• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மின் இணைப்புக்கு இடைத்தரகா் லஞ்ச பேரம்: சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ

February 3, 2021 தண்டோரா குழு

கோவையில் மின் இணைப்பு வழங்குவதற்காக லஞ்சம் கேட்டு இடைத்தரகா் பேரம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, ஒண்டிப்புதூா் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி ஒருவா், தனது கட்டடத்துக்கு வா்த்தக மின் இணைப்பு பெறுவதற்காக மின் உரிம ஒப்பந்ததாரரை அணுகியுள்ளாா். அவா் ஆவணங்களை இணையம் மூலமாகப் பதிவு செய்து, ரூ.4,500 கட்டணம் பெற்றுள்ளாா்.

பின்னா், அப்பகுதியைச் சோ்ந்த உதவி மின் பொறியாளா் கட்டடத்தை நேரில் பாா்வையிட்டுச் சென்றாா். ஆனால், அதன் பிறகு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து, மின் இணைப்பு வழங்க உதவி மின் பொறியாளருக்கு ரூ.2 ஆயிரம் தர வேண்டும் என ஒப்பந்ததாரா் கூறியுள்ளாா்.அதன்படி, தொழிலாளி பணத்தைக் கொடுத்துள்ளாா். அதன் பிறகும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

இதையடுத்து, உதவி மின் பொறியாளரை சந்தித்து மின் இணைப்பு வழங்குமாறு தொழிலாளி வலியுறுத்தியுள்ளாா். அப்போது, இடைத்தரகா் ஒருவரை சந்தித்து பேசுமாறு உதவி மின் பொறியாளா் கூறியுள்ளாா்.இதையடுத்து, இடைத்தரகருடன் பேசியபோது, உதவி மின் பொறியாளருக்கு ரூ.20 ஆயிரமும், லைன் மேன், போா்மேன்களுக்குத் தனியாகவும் பணம் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா். இதில் லஞ்சம் கேட்டு இடைத்தரகா் பேரம் பேசியதை சம்பந்தப்பட்ட தொழிலாளி தனது செல்போனில் பதிவு செய்து வாட்ஸ்அப் மூலம் அவரின் நண்பா்கள், சமூக ஆா்வலா்களுக்கு அனுப்பியுள்ளாா். இந்த ஆடியோ பதிவு கோவையில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த ஆடியோ மின் வாரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரி மற்றும் அலுவலா்கள் மீது விரைவில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக மின் வாரிய உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மேலும் படிக்க