• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மின்வாரியத்திற்கு இருக்கும் கடனிற்கு 13 சதவீதம் வரை வட்டி கட்டி வருகின்றோம் – அமைச்சர் செந்தில் பாலாஜி !

October 23, 2021 தண்டோரா குழு

கோவையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவை மாவட்டத்தை பொறுத்த வரை 8905 மின்மாற்றிகள் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது.கோவை மாவட்டத்தில் 203 கோடி ரூபாய் வரையில் மின்வாரியம் சார்பில் பணிகள் நடைபெற்று வருகின்றது. ஒரே ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு இலவச மின் இணைப்பு கொடுப்பது சாதனை.மின்வாரியத்தில் புதிய நடைமுறைகள் இல்லை.ஏற்கனவே இருக்கும் நனைமுறைகள் பின்பற்றபடுகின்றது.

மின்வாரிய கடன்சுமை 1.59 லட்சம். வருடத்திற்கு 15 ஆயிரம் கோடி வட்டி மட்டுமே செலுத்தும் நிலை இருக்கின்றது. இதற்கு காரணம் ஆய்வு செய்த போது, 50 விழுக்காடு மின்சாரம் கொள்முதல் செய்ய செலவிடப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளில் சொந்த நிறுவுதிறன் 53 மெகாவாட் மட்டும் அதிகபடுத்தப்பட்டு இருக்கின்றது.ஆய்வு பணிகள் தொடர்ந்து வருகின்றது.உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி 2500 மெகாவாட்டாக இருக்கின்றது. இடைவெளியை குறைக்க சூரிய மின்சக்தி, கேஸ் மின் உற்பத்தி ஆகியவற்றை அதிகப்படுத்தவும், ஏற்கனவே திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தாமல் வைத்திருக்கும் திட்டங்கள் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.4 சதவீத கமிஷன் குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்து இருப்பது குறித்த கேள்விக்கு அரிச்சுவடிகளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை.நேற்றே இதற்கு முற்று புள்ளி வைத்து விட்டேன் பெரியாரின் வாசகத்துடன் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றேன்.
நல்லமனிதராக,சாப்பாட்டுக்கு உப்பு போட்டு சாப்புடுற ஆளாக இருந்தால் அண்ணாமலை ஆதாரத்தை வெளியிட வேண்டும். ஆதாரம் இல்லாமல் இருப்பை காட்டி அவர் பேசுகின்றார்.
நல்ல திட்டங்களுக்காக வந்திருக்கின்றோம்.

கோவை மாவட்டத்தை பொறுத்த வரை பத்திரிகையாளர்கள் உள்ளடக்கிய வாட்ஸ் அப் குழுக்கள் வைத்துள்ளோம்.இருப்பை காட்டுற்காக சிலர் பேசுவதற்கெல்லாம் நேரத்தை வீண்டிக்க வேண்டாம் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் மின்வாரியத்தில் பணியல் சேர்க்கப்படுவது தொடர்பான கேள்விக்கு, மின்வாரியத்தில்
1.46 லட்சம் பணியிடங்களில் 56 ஆயிரம் பணியிடம் காலியாக இருக்கின்றது. மின்வாரியத்திற்கு இருக்கும் கடனிற்கு 13 சதவீதம் வரை வட்டி கட்டி வருகின்றோம். செலவீனங்களை குறைக்கவும் வெளிப்படை தன்மையுடன் இந்த அரசு செயலபட்டு வருகின்றது.

புதிய பணிநியமனங்கள் வரும் போது இந்த பிரச்னைகள் முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு விற்றவர்கள் 134 பேர் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பேற்று 5 மாத காலத்தில் கொரொனாவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. தேர்தலின் போது முதல்வர் 505 வாக்குறுதிகள் கொடுத்தார்.அதில் 202 வாக்குறுதகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. துறை சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

கோவையில் சூயஸ் குடிநீர் திட்டம் குறித்து ஆய்வு கூட்டத்திற்கு பின்பு இந்த நிலையினை முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

மேலும் படிக்க