September 25, 2020
தண்டோரா குழு
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியமுக்கு கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.எஸ்பிபி உடல்நிலை மோசம் அடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று நீங்கியதாக கடந்த 7ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,நேற்று மாலை முதல் எஸ்.பி.பி.யின் உடல்நிலை, மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. நடிகர் கமல்ஹாசன் நேற்று எம்ஜிஎம் மருத்துவமனைக்கு சென்று எஸ்பிபி உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்தார்.மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ள எஸ்.பி.பி.க்கு எக்மோ, உயிர் காக்கும் பிற கருவிகளுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில்,தற்போது சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி ஆகியோர் வந்துள்ளனர்.
இதனிடையே, எஸ்.பி.பி.க்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ வல்லுனர்களுடன் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் ஆலோசனை மேற்கொண்டார். இதனால் மருத்துவமனையில்கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.