• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாவீரர் நாளை முன்னிட்டு திராவிடர் கழகத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

November 28, 2018 தண்டோரா குழு

மாவீரர் நாளை முன்னிட்டு தமிழீழ விடுதலை போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு, கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி இன்று அஞ்சலி செலுத்தினர்.

தமிழீழ விடுதலை போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த சங்கர் என்பவர் நினைவாக ஆண்டுதோறும் நவம்பர் 27 ம் தேதி உலகம் முழுவதும் தமிழர்களால் மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பெரியார் சிலை முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாவீரர் நாளை அனுசரித்தனர். மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய அவ்வமைப்பினர்,தமிழீழத்திற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.தமிழீழம் மட்டுமே ஈழ தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் எனவும்,விரைவில் தமிழீழம் மலரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க