• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாற்றான் தாய் மனப்பான்மையை விவசாயிகள் மத்தியில் மத்திய , மாநில அரசுகள் காட்டக்கூடாது – ஜி.கே.வாசன்

December 26, 2018 தண்டோரா குழு

விவசாயிகளின் உண்மை நிலையை புரிந்து விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதை கைவிட்டு புதைவழிதடம் வழியாக மின்பாதை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 மாவட்ட விவசாயிகள் 8 மையங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் சுல்தான் பேட்டையில் 10 வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. காத்திருப்பு போராட்டம் நடைபெறும் மையத்தின் ஒரு பகுதியில் 4 வது நாளாக உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் இன்று சுல்தான் பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

தமிழகத்தில் தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு திட்டங்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். விவசாயிகளின் எண்ணங்களைக் பிரதிபலிக்காத அரசாக மத்திய ,மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மேகதாது விவகாரம் ஒரு பக்கம் போய் கொண்டு இருக்கையில், தற்போது விவசாய நிலத்தில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க பணி நடைபெற்று வருகிறது. இது கண்டிக்கதக்கது. காவல்துறை மற்றும் வருவாய் துறை மூலமாக இத்திட்டத்தைக் திணிக்க பார்க்கிறார்கள்.

மேலும், கேபிள் மூலமாக இத்திட்டத்தைக் மாற்றுவது அவசியம்.அவசர நடவடிக்கைகள் எடுக்க அரசு முன் வரவேண்டும்.உண்ணாவிரதம் இருக்கின்ற விவசாயிகளின் நிலையைக் அரசு உணர வேண்டும். மாற்றான் தாய் மனப்பான்மையைக் விவசாயிகள் மத்தியில் மத்திய ,மாநில அரசுகள் காட்டக்கூடாது. விவசாயிகளில் வாழ்வாதாரத்தைக் காக்க மாநில அரசுக்கு முழு பங்கு உண்டு எனவும் சுமூக முறையில் இந்த பிரச்சினையை தீர்க்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்

மேலும் படிக்க