• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மார்டின் நிறுவன ஊழியர் உயிரிழந்த விவகாரம் விசாரணையை துவங்கிய நீதிபதி

May 22, 2019 தண்டோரா குழு

மார்டின் நிறுவன ஊழியர் பழனிச்சாமி உயிரிழந்த விவகாரத்தில் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் விசாரணை துவக்கினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் லாட்டரி அதிபர் மார்ட்டினின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்துனர். இதற்கிடையில், அந்நிறுவனத்தில் காசாளராக பணியாற்றிய பழனிச்சாமி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, பழனிசாமி மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின் படி , பழனிச்சாமி உயிரிழப்பு தொடர்பாக விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட கோவை 8 வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் இன்று விசாரணையை துவக்கினார்.

கோவை அரசு மருத்துவமனையில் பழனிச்சாமி உடலுக்கு பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களிடம் விசாரணை செய்து வருகிறார்

மேலும் படிக்க