• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மார்ச் 13ம் தேதி தமிழகம் வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

March 2, 2019 தண்டோரா குழு

தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வரும் 13ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையில் ஒரு அணியும் அதிமுக தலைமையில் ஒரு அணியும் உருவாகி வருகிறது.அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம் உறுதியாகிவிட்ட நிலையில் தேமுதிகவுடன் கிட்டத்தட்ட கூட்டணி முடிவாகிவிட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு புதுச்சேரியில் ஒரு தொகுதியும், தமிழகத்தில் 9 தொகுதிகளும் என 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் 13ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். மேலும், ராகுல்காந்தியுடன், பிரியங்கா காந்தியும் வரலாம் என்றும் தென் தமிழகத்தில் தனது பிரச்சாரத்தை ராகுல் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க