July 1, 2019
தண்டோரா குழு
திமுக மாநிலங்களவை வேட்பாளா்களாக தொ.மு.ச. சண்முகம், வழக்கறிஞா் வில்சன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டி.ரத்னவேல், மைத்ரேயன், கே.ஆர். அர்ஜூனன், ஆர். லட்சுமணன், டி. ராஜா மற்றும் கனிமொழி ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24-ம்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாகிறது. இதையடுத்து, தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மொத்தமுள்ள 6 சீட்களில் அதிமுக மற்றும் திமுக வசம் தலா 3 சீட்கள் இருக்கின்றன.
இந்நிலையில், திமுக மாநிலங்களவை வேட்பாளா்களாக தொ.மு.ச. சண்முகம், வழக்கறிஞா் வில்சன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள ஒரு எம்.பி. சீட் தேர்தல் கூட்டணி உடன்படிக்கையின் படி, மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.