• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநகராட்சி, 4 நகராட்சி, 15 பேரூராட்சி, 920 கிராமங்களுக்கு இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

June 22, 2022 தண்டோரா குழு

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்படும் பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வீரபாண்டி பிரிவு அருகே 1500 மி.மீ. விட்டமுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொணரும் குழாயில் அவசர பராமரிப்பு பணிகள் இன்று (22ம் தேதி) மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் கோவை மாநகராட்சி பகுதிகள், பல்லடம், கருமத்தம்பட்டி, மதுக்கரை, கூடலூர் நகராட்சிகள், 15 பேரூராட்சிகள் மற்றும் 920 வழியோர கிராம குடியிருப்புகளுக்கும் 22ம் தேதி காலை 6 முதல் 23ம் தேதி இரவு 12 மணி வரை குடிநீர் விநியோக நிறுத்தப்படும். பணிகள் முடிக்கப்பட்டு 23ம் தேதி (நாளை) நள்ளிரவு முதல் குடிநீர் விநியோகம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே உள்ளாட்சி நிறுவனங்களும், பொது மக்களும் தங்கள் உள்ளூர் நீராதாரங்கள் மூலமாக மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளுமாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் (பராமரிப்பு கோட்டம்-பில்லூர்) கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க