• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை கட்ட கோரிக்கை

December 15, 2021 தண்டோரா குழு

கோவை பயனீர் மில் ரோடு பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை கட்ட கோரி மாநகராட்சி அலுவலகத்தில் பீளமேடு பகுதி மதிமுக செயலாளர் வெள்ளியங்கிரி மனு அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

இந்த மாநகராட்சி மேல்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கழிப்பறை வசதியில்லை. இதனால் மாணவ- மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று உடல் உபாதைகளை கழிக்க வேண்டியுள்ளது.

உடனடியாக மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டு இப்பள்ளியில் கழிப்பறை கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க