• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநகராட்சியில் ரூ.44 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி

December 10, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் ரூ.44 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.

இது குறித்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலைகளில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளன. டியூஆர்ஐபி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி, டிஎன்எஸ்யூடிபி திட்டத்தின் கீழ் ரூ.34 கோடி என மொத்தம் ரூ.44 கோடிக்கு, மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

இதில், 289 பணிகளுக்கு 80 கிலோ மீட்டருக்கு சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ரூ.20 கோடிக்கு தெருவிளக்குகள் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, அரசுத் திட்டங்களில் ரூ.200 கோடி மதிப்பிலான சாலைகள் மற்றும் இணைப்பு சாலை பணிகளுக்காகவும், சூரிய மின்சக்தி திட்டத்திற்காகவும் அரசிடம் கருத்துரு சமர்பிக்கப்பட்டுள்ளது.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கூடுதல் கட்டடம் அமைப்பதற்கும், குளங்கள் தூர்வாரும் பணிகளுக்கும் கருத்துரு சமர்பிக்கப்பட்டுள்ளதது. அதற்கான நிதியை கோவை வ.உ.சி.பூங்காவில் நடைபெற்ற விழாவில் முதல்வர் வழங்கியுள்ளார். பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும் படிக்க