• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மஹிந்திரா நிறுவனம் அப்டைம் சர்வீஸ் உத்திரவாதம் என உறுதி அளிக்கின்றது

May 12, 2022 தண்டோரா குழு

மஹிந்திரா குழுமத்தின் ஒரு அங்கமான மஹிந்திராவின் கட்டுமான உபகரணப் பிரிவு, அவர்களின் டீளு4 வரம்பு பேக்ஹோ லோடர்ஸ் – மஹிந்திரா எர்த்மாஸ்டர்-க்கு அவர்களின் தனித்துவமான மற்றும் அதிரடியான வாடிக்கையாளர் மதிப்பு முன்மொழிவான “ஒரு லிட்டர் எரிபொருளுக்கு அதிக உற்பத்தித்திறனைப் பெறுங்கள் அல்லது இயந்திரத்தைத் திரும்பப் பெறுங்கள்” என்ற உத்திரவாதத்தை அறிவித்தது.

புதிய வரம்பில் நிரூபிக்கப்பட்ட மற்றும் நம்பகமான 74 ஹெச்பி சிஆர்ஐ மஹிந்திரா எஞ்சின் மற்றும் பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள், அதிநவீன ஐமேக்ஸ் டெலிமேடிக்ஸ் தீர்வு, இவை அனைத்தும் சேர்ந்து, உத்தரவாதமான சிறந்த எரிபொருள் செயல்திறனை உறுதி செய்கிறது. இயக்கச் செலவில் (கிட்டத்தட்ட 50 சதம்) எரிபொருள் ஒரு முக்கிய அங்கம் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, பனானா பூம், ஜாய்ஸ்டிக் நெம்புகோல், வலுவான வடிவமைப்பு மற்றும் பெரிய வாளிகள் போன்ற தனித்துவமான அம்சங்களுடன் உள்ளது.

எர்த்மாஸ்டர் வரம்பு, அனைத்து வகையான மண்வாரும் பயன்பாடுகளுக்கும், அது சுரங்கம், அகழிகள், நொறுக்குகள், கட்டிடம் கட்டுதல் அல்லது கட்டுமானத் துறையில் வேறு ஏதேனும் வேலை எதுவாயிருந்தாலும் மிகவும் பொருத்தமானது ஆகும். மஹிந்திரா பிஎஸ்4 பேக்ஹோ லோடர் – எர்த்மாஸ்டர், இந்த போட்டியான நன்மையுடன், அவர்களுக்கு ஒரு வரையறையையும், முழுமையான மன அமைதியையும், அவர்களின் போக்குவரத்து வணிகத்தை விரிவுபடுத்தி, அதிக செழுமையையும் வழங்கும்.

மகிந்திரா அண்டு மஹிந்திரா லிமிடெட் வணிக வாகனங்கள் வணிகப் பிரிவின் வணிகத் தலைவர் ஜலஜ் குப்தா பேசுகையில்,

“ஒரு லிட்டர் உற்பத்தித்திறனுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் (அல்லது இயந்திரத்தைத் திருப்பித் தரவும்’) என்ற வாக்குறுதியானது கட்டுமான உபகரணத் துறையில் ஒரு முக்கிய நகர்வாகும். சுழலுகின்ற எரிபொருள் விலைகளின் அடிப்படையில், இந்த வாடிக்கையாளர் மதிப்பு முன்மொழிவை அறிமுகப்படுத்த சிறந்த நேரம் இருக்கவில்லை. தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, வர்க்க-முன்னணி தயாரிப்புகளை உருவாக்குவதற்கும், இந்திய கன்ஸ்ட்ரக்ஷன் எகுய்ப்மெண்ட் தொழில்துறைக்கு உயர் தரங்களை அமைப்பதற்கும், மஹிந்திராவின் திறனில், எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இது மீண்டும் உறுதிப்படுத்தும் என்று, நாங்கள் உறுதியாக நம்புகிறோம். சேவை நேர உத்திரவாதம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கான எங்கள் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது மற்றும் எங்கள் தயாரிப்புகள் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய செயல் திறன்களில் எங்கள் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது”.

ஜலஜ் குப்தா மேலும் கூறினார், “எங்கள் புதிய பிஎஸ்4 இயந்திரங்கள் அதிக எரிபொருள் செயல்திறனை வழங்கியுள்ளன, இது, இந்திய வாடிக்கையாளர்களின் ஆழமான புரிதலில் வேரூன்றிய மஹிந்திராவின் சிறந்த தொழில்நுட்ப வலிமையின் விளைவாகும். கூடுதலாக, எம்சிஇ ஆனது, எங்களின் வாடிக்கையாளர்களுக்கு, அதிக வேலை நேரத்தை உறுதிசெய்யும் வகையில் இயந்திரத்தின் வேகமான பேணல் மூலம், சேவை உத்தரவாதத்தை வழங்குகிறது. அதிநவீன ஐமேக்ஸ் டெலிமேடிக்ஸ் தொழில்நுட்பமானது, தொலைதூரத்தில் இருந்து தங்கள் இயந்திரங்களின் மீது உரிமையாளர்களுக்கு உறுதியான கட்டுப்பாட்டை வழங்குவதன் மூலம் உரிமைசெலவைக் குறைக்க உதவுகிறது.

மேலும் படிக்க