• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மவுண்ட் எல்பிருஸ் சிகரத்தில் ஏறி இந்திய சிறுமி சாதனை

July 3, 2017 தண்டோரா குழு

ரஷ்யாவிலுள்ள உயரமான மவுண்ட் எல்பிருஸ் சிகரத்தின் மீது 9 வயது இந்திய சிறுமி ஏறி சாதனை புரிந்துள்ளாள்.

குஜராத் மாநிலம் சுரத்தை சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது தனஸ்ரீ என்ற மாணவி ரஷ்யாவின் 18,510 மீட்டர் உயரம் கொண்ட மவுண்ட் எல்பிருஸ் சிகரத்தில் ஏறிய இளமையான சிறுமி என்னும் பெருமையை பெற்றுள்ளார்.

தனுஸ்ரீ, தனது தாய் சரிகா, தந்தை ஜிக்னேஷ், மற்றும் 13 வயது சகோதரன் ஜனமுடன் ஜூன் 13-ம் தேதி மலையேற தொடங்கி ஜூன் 18-ம் தேதி கீழே வெற்றிகரமாக இறங்கினார்.

இது குறித்து மருத்துவர், மலை ஏறுபவரான தனுஸ்ரீயின் தாயார் சரிகா கூறுகையில், “மலை ஏறிக்கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட பனி காற்றால், குழந்தைகளில் நலம் கருதி, திரும்பி வந்துவிடலாம் என்று கூட நானும் என் கணவரும் நினைத்தோம். ஆனால், மலையின் முக்கால் பகுதி வந்துவிட்டோம், சிகரத்தை தொடுவோம் என்று குழந்தைகள் மனதிடத்துடன் கூறியது வியப்பை தந்தது. கடைசி நாளில் 1௦ முதல் 12 கிலோ சுமைகளை சுமந்துக்கொண்டு, சிகரம் தொட 11 மணிநேரம் எங்களுக்கு தேவைபட்டது”” என்று கூறினார்.

தனுஸ்ரீ கூறுகையில், “எனது தாய் எவரெஸ்ட் சிகரத்தை ஏறியதில்லை. நானும் அதில் ஏற வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு நாள், நாங்கள் குடும்பமாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவோம் என்று நம்புகிறேன்”” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க