• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மழை வேண்டி இரு ஆண்கள் திருமணம் !

August 5, 2017 தண்டோரா குழு

மத்திய பிரதேஷ்யில் மழைக்காக வருண பகவானின் கருணை வேண்டி, இரண்டு ஆண்கள் திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை தந்துள்ளது.

கடந்த சில வருடங்களாக மழை சரியாக பெய்யாத காரணத்தால், வறட்சி ஏற்பட்டது.பருவமழையை எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கிறது. இதனால் சரியான விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்நிலையில் மத்திய பிரதேஷ், இன்டோர் மாவட்டத்தின் முசாகேதி என்னும் கிராமத்தில் இரண்டு ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகளும் உண்டு.

அந்த திருமணத்திற்கு அவர்களுடைய மனைவியும் குழந்தைகளும் வந்திருந்தனர்.

திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அவர்களுக்கு சுவையான திருமண விருந்து பரிமாறப்பட்டது. திருமணம் சடங்கின் தொடங்கி சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது. திருமணம் முடிந்த பிறகு இருவரும் தங்கள் மனைவி குழந்தைகளுடன் வீடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க