• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மழைநீரை மோட்டார் பம்புகள் கொண்டு அகற்றிட வேண்டும் – மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு

January 7, 2021 தண்டோரா குழு

கோவையில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதில் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட அரசு அலுவலர் குடியிருப்பு, கங்கா நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இந்த இடங்களை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாநகராட்சி ஆணையாளர் அலுவலர்களிடம் கூறுகையில், ‘‘மழைநீரை உடனடியாக மோட்டார் பம்புகள் கொண்டு அகற்றிட வேண்டும். அப்பகுதிகளில் வெட்மிக்ஸ் சாலைகள் அமைத்திட வேண்டும்,’’ என்றார்.

இவ்வாய்வின்போது மாநகரப் பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க