• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மலைப்பாம்பை துன்புறுத்தி டிக்டாக் வெளியிட்ட இளைஞர்கள் கைது

June 29, 2020 தண்டோரா குழு

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ள கோவை குற்றால வனப்பகுதிக்குள் சட்ட விரோதமாக நுழைந்து மலைப்பாம்பை துண்புறுத்தி டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட இளைஞர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.

கொரோனா ஊரடங்கால் கோவை குற்றாலம் மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை குற்றால வனப்பகுதிக்குள் காரில் சென்ற இளைஞர்கள் சிலர் வனப்பகுதியில் காரை நிறுத்தி அங்கிருந்த மலைப்பாம்பை பிடித்து துன்புறுத்தும் விடியோ காட்சி டிக்டாக்கில் வைரல் ஆனாது.

இதையடுத்து பூளுவாம்பட்டி வனத்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு சட்ட விரோதமாக வனப்பகுதிக்குள் புகுந்து மலைப்பாம்பை துன்றுபுறுத்திய நரசிபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ் (25), விஜய் (27) உள்ளிட்ட ஆறு இளைஞர்களை கைது செய்து அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

வைரல் ஆகும் வீடியோ குறித்து பேசிய வனவிலங்கு ஆர்வலர்கள் கூறியதாவது,

சமீப காலமாக டிக்டேக் போன்ற செயலிகளில் வனவிலங்குகளை துன்புறுத்தும் விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட கோவை குற்றால வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மலைப்பாம்பை துன்புறுத்தி அதை டிக்டேக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மீது அபராதம் மட்டுமின்றி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க