• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல்

December 21, 2018 தண்டோரா குழு

சென்னையை சேர்ந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

வடசென்னை மக்களால் ஐந்து ரூபாய் மருத்துவர் என் அன்புடன் அழைக்கப்பட்டவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன். சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை எளிய மக்களுக்கு வெறும் ஐந்து ரூபாயில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த புதன்கிழமை காலமானார். அவரது இறுதி சடங்கு சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவரது மறைவு குறித்து பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர். அதைபோல் அவரது மறைவு குறித்து ஊடங்களிலும் செய்திகள் வெளியான. இந்நிலையில், ஊடகங்கள் மூலம் ஜெயச்சந்திரன் மறைவை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்.

மருத்துவர் ஜெயச்சந்திரன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து. நிஜவாழ்வில் அவர் ஒரு கதாநாயகர் என்று பாராட்டியுள்ளார்.

மேலும் படிக்க