February 15, 2019
தண்டோரா குழு
புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குலை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என .ஆர்.பி.எஃப் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 பேர் வீரமரணம் அடைந்தனர். இவர்களின் உடல்கள், புட்காமில் உள்ள சிஆர்பிஎப் முகாமிற்கு கொண்டு வரப்பட்டு, அங்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குலை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என .ஆர்.பி.எஃப் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிஆர்பிஎப் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இதனை நாங்கள் மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம். புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களை நாங்கள் வணங்குகிறோம். உயிர் தியாகம் செய்த எங்கள் சகோதரர்களின் குடும்பத்திற்கு துணை நிற்போம். இந்த கொடூர தாக்குதலுக்கு பழிதீர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.