• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மனை வரைபடங்கள் அங்கீகரிக்க புதிய மென்பொருள் அறிமுகம் கோவை ஆட்சியர் தகவல்

February 7, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் புறநகர வளர்ச்சி மற்றும் சமூக பொருளாதார மாற்றங்கள் காரணமாக விளைநிலங்கள் அதிக அளவில் விவசாயம் அல்லாத இதர பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதால், அதிக அளவில் மனை வரைபடங்கள் நகரமைப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த உட்பிரிவுகள் வருவாய் கணக்குகளில் உடனுக்குடன் கொண்டு வரப்படாமல் மனுதாரர்கள் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சென்று மனு செய்த பின்னர் நில அளவையாளர், கிராமத்திற்கு சென்று ஒவ்வொரு உட்பிரிவுகளையும் அளந்து, தயார்செய்து வட்டாட்சியர் உத்தரவு பெற்று, அதன்பின்னரே வருவாய் கணக்குகளில் மாறுதல் மேற்கொள்ளும் நடைமுறை தற்போது இருந்து வருகிறது.

இந்த சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு, ஒரு புதிய மென்பொருள் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மனை அபிவிருத்தியாளர்கள் பொதுசேவை மையத்தின் மூலம் உரிய கட்டணத்துடன் மனுவை சமர்ப்பித்து, அங்கீகரிக்கப்பட்ட மனை வரைபடத்தின்படி புதிய உட்பிரிவுகளை தமிழ்நிலம் மற்றும் கொலாப்லேண்ட் மென்பொருளில் உடனுக்குடன் ஒப்புதல் மேற்கொண்டு வருவாய் கணக்குகளிலும் மாறுதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க