June 2, 2018 தண்டோரா குழு
ஒடிசா மாநிலத்தில் மனைவியை வைத்து சூதாட்டம் விளையாடி தோல்வியடைந்ததால் மனைவியை பலாத்காரம் செய்ய அனுமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓடிசா மாநிலத்தில் பன்ஷீர் மற்றும் அவரது நண்பன் தலாய் இருவரும் சூதாட்டம் விளையாடி கொண்டிருந்தனர்.பன்ஷீர் தன்னிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை வைத்து விளையாடி தோற்றதால் இறுதியாக தனது மனைவியை வைத்து விளையாடினான்.
ஆனால் அதிலும் பன்ஷீர் தலாயிடம் தோற்றுப்போனதால் பன்ஷீர் தனது மனைவியை அழைத்து வந்து தலாயிடம் ஒப்படைத்தான்.தலாய் பன்ஷீர் மனைவியை அவன் கண்முன்னே பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
மேலும்,இதனை வெளியே கூறக்கூடாது என பன்ஷீர் தன் மனைவிக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளான்.ஆனால் அந்த பெண் அதையும் மீறி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.இதனை அறிந்த பன்ஷீர் மற்றும் தலாய் இருவரும் தலைமறைவாகினர்.