• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மனைவிக்காக கணவர் பரப்புரை மேற்கொள்ளவதில் என்ன தவறு – பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கில் உயர்நீதிமன்றம் பளீர்!

April 11, 2019 தண்டோரா குழு

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அவரது மனைவி ஆதரவாக பரப்புரை மேற்கொள்ளக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில் பாலகிருஷ்ணா ரெட்டி தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணன் ரெட்டி மீது 1998-ல் பேருந்து மீது கல்வீசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 108பேரில் 16பேர் குற்றவாளிகள் என ஜனவரி 7-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. மேலும், பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 10,500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் அதிரடி உத்திரவிட்டது. இதையடுத்து, பாலகிருஷ்ணன் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து ஓசூர் தொகுதி காலியாக இருப்பதாக தமிழக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவிப்பு வெளியிடிருந்தார்.

இதற்கிடையில், பாலகிருஷ்ண ரெட்டி எம்.எல்.ஏ.வாக இருந்த ஓசூர் தொகுதிக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில், சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ணரெட்டியின், மனைவியை அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களத்தில் உள்ளார். இவ்வேலையில் இடைத்தேர்தல் நடைபெற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் புகழேந்தி. இவர், சென்னை உயர்நீதிமன்றதில் மனு தாக்கல் செய்துள்ளார் அதில் “குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. ஆனால், அவர் மனைவிக்காக பிரசாரம் செய்கிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிபிட்டதொடு மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கையாக வைத்திருந்தார்.

இதையடுத்து,அவசர வழக்காக நேற்று பிற்பகலில் விசாரித்த நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் புகைப்பட ஆதாரங்கள் தரப்பட்டது. அதில், அதிமுக வேட்பாளர் ஜோதிக்கு ஆதரவாக பாலகிருஷ்ணா ரெட்டி பரப்புரை மேற்கொண்ட புகைப்படங்கள் கொண்ட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆதாரங்களை பார்த்த நீதிபதிகள், மனைவிக்காக கணவர் பரப்புரை மேற்கொள்ளவதில் என்ன தவறு இருக்கிறது? என கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக நாளை தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறி நேற்று இவ்வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு போது, மனைவிக்காக கணவர் பரப்புரை மேற்கொள்ளவதில் என்ன தவறு இருக்கிறது என கேட்ட நீதிபதிகள், பாலகிருஷ்ணா ரெட்டி தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை இல்லை என உத்தரவிட்டனர். மேலும் அமமுக வேட்பாளர் புகழேந்தி மனுவை தள்ளுபடி செய்தும் உத்திரவு பிறப்பித்தனர்.

மேலும் படிக்க