• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மனிதநேயம் பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக கோவை அரசு மருத்துவ மனையில் இரத்த தான முகாம்

January 21, 2021 தண்டோரா குழு

கோவையில் மனிதநேயம் பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக கோவை அரசு மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

கோவை,திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் இருந்து அறுவை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.இதனால் தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சைகளுக்கு இரத்தம் தேவைப்படுவதால் இரத்த பற்றாக்குறையை போக்கும் விதமாக தன்னார்வலர்கள் பலர் இரத்ததானம் செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மனிதநேயம் பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது.கோவை அரசு மருத்துவமனை இரத்த வங்கியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மனிதநேயம் பவுண்டேஷன் டிரஸ்டின் நிறுவன தலைவர் சுலைமான் தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளர்களாக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுனன், நல்லறம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் நல்லறம் சுரேஷ், சென்னை மொபைல்ஸ் சம்சு அலி, அனுபவ் ரவி, இக்னீசியஸ் பிரபு, ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகாமில் மனிதநேயம் பவுண்டேஷன் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் இரத்ததானம் செய்தனர். இதில் ஓ பாசிட்டிவ் கோவை பஷீர், பால்ராஜ், சித்திக், உமர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க