• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத்திய பாதுகாப்பு படை முகாம் மீது தாக்குதல் 3 பேர் பலி

January 9, 2017 தண்டோரா குழு

ஜம்மு காஷ்மீர் அக்னூர் எல்லை பகுதியில் உள்ள பொது பொறியியல் காப்பு படை முகாமின் மீது திங்கள்கிழமை (ஜனவரி 9) தீவிரவாதிகள் நடத்திய தீடீர்த் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை (ஜனவரி 9) கூறியதாவது:

ஜம்மு மாவட்டத்தில் உள்ள அக்னூர் எல்லைப் பகுதியுள்ள பொது பொறியியல் காப்பு படை(GREF) முகாம் பட்டால் கிராமத்தில் அமைந்துள்ளது. அந்த முகாமின் மீது தீவிரவாதிகள் நாளிரவு 1 மணியளவில் திடீர்த் தாக்குதல் நடத்தினர். இதில், பொது பொறியியல் காப்பு படை நிர்வாகிக்கும் கட்டுமான பிரிவு துறையில் கூலி தொழிலாளர்கள் 3 பேர் பரிதாமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த ராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல் துறையினரும் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். எல்லையைத் தாண்டிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியவிற்குள் ஊருடுவி இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கிறோம்.

இந்நிலையில், இந்திய ராணுவத்தினர் அப்பகுதியை சுற்றி வளைத்துள்ளனர். அங்கு பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை இராணுவத்தினருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க