மத்திய அரசின் புதிய வரைவுக் கல்வி கொள்கையை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பாக கோவை அரசு கலை கல்லூரி முன்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் வரைவுக் கல்வி கொள்கையை எரிக்க முயன்ற மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
மும்மொழி கொள்கை, கல்லூரியில் சேர நுழைவு தேர்வு உள்ளிட்ட திருத்தங்களுடன் புதிய வரைவுக் கல்வி கொள்கையை மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. இதற்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இன்று மத்திய அரசின் இக்கொள்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கம் சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலை கல்லூரி முன்பாக இந்திய மாணவர் சங்கம் சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசு புதிய வரைவுக் கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க முயல்வதாகவும், மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.
கல்வியில் முன்னோடியாக இருக்கும் தமிழகம், மத்திய அரசின் இந்த புதிய கல்வி கொள்கையால் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த முயற்சியை கண்டித்து , வரைவுக் கல்வி கொள்கை நகலை மாணவர்கள் எரிக்க முற்பட்டனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே லேசான சலசலப்பு ஏற்பட்டது.
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் அஞ்சலி
ஈஷாவில் ‘26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின’ விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா
காவேரி கூக்குரல் கருத்தரங்கம் மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது; இது காலத்தின் தேவை – அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
கோவை மண்டல கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 2025 – 27ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
“நிஜ உலகில் இருப்பது போன்ற ஒன்றை விஷுவல் எபெக்ட்ஸ் மூலம் உருவாக்க வேண்டும் என்றால், அது குறித்து முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும் – பீட் டிராப்பர்