• Download mobile app
05 Aug 2026, WednesdayEdition - 3829
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா

June 20, 2018 தண்டோரா குழு

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன்,பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த ரகுராம் ராஜன்,ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார்.அப்போது,அர்விந்த் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார்.அவரது பதவிக்காலம் முடிந்த நிலையில் மேலும் ஒரு வருடம் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில்,மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியை அர்விந்த் சுப்ரமணியன் ராஜினாமா செய்துள்ளார்.சொந்த காரணங்களுக்காக அவர் பதவி விலகியுள்ளார்.அதனால்,அவரது ராஜினாமாவை நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஏற்று கொண்டார்.

இது தொடர்பாக அருண்ஜெட்லி தனது பேஸ்புக் பக்கத்தில்,

மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா வருத்தமளிக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் அர்விந்த் சுப்ரமணியன் என்னை,வீடியோ கான்பரன்சிங் முறையில் தொடர்பு கொண்டார்.அப்போது, சொந்த காரணங்களுக்காகவும், குடும்ப பணிகள் காரணமாகவும் அமெரிக்கா திரும்ப உள்ளதாக கூறினார்.இதனால்,அவரது ராஜினாமாவை ஏற்பதை தவிர வேறு வழியில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க