• Download mobile app
10 May 2026, SundayEdition - 3742
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருடன் தமிழக முதலமைச்சர் சந்திப்பு

March 3, 2017 தண்டோரா குழு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை வெள்ளிக்கிழமை (3 மார்ச்) சந்தித்துப் பேசினார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த அமைச்சர் ஜாவடேகரை முதல்வர் சந்தித்துப் பேசினார். அப்போது, முதலமைச்சருடன் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பு 3௦ நிமிடம் நடைபெற்றது. சந்திப்பின்போது, மருத்துப் படிப்புகளில் சேருவதற்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் ‘நீட்’ தேர்வு’ தமிழக மாணவர்களுக்கு நடத்தப்படக் கூடாது. தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கையை முன் வைத்தார்.

தமிழக அரசின் இந்தக் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

மேலும் படிக்க