• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத்தியக் குழு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் -வாசன்

December 28, 2016 தண்டோரா குழு

மத்தியக் குழு சரியாக, முறையாக, முழுமையாக ஆய்வு செய்து தமிழகத்துக்கான நிவாரணத் தொகையை முழுமையாக கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வர்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட கடலோர மாவட்டங்கள் மற்றும் பிற சில மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

புயலால் பாதித்த பகுதிகளையும், சேதங்களையும் ஆய்வு செய்ய மத்திய குழுவினர் புதன்கிழமை (டிசம்பர் 28) சென்னை வந்துள்ளனர். இவர்கள் புயல் பாதித்த பகுதிகளில் புதன், வியாழன் ஆகிய நாட்களில் ஆய்வு செய்கிறார்கள்.

புயலால் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிடும் போது அப்பகுதி வாழ் விவசாயிகளிடமும் பொதுமக்களிடமும் சேதம் குறித்து கேட்டறிய வேண்டும். மத்திய குழுவினர் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

அவ்வாறு ஆய்வு செய்யப்பட்டதன் அறிக்கையை அக் குழுவினர் மத்திய அரசுக்கு உடனடியாக அளிக்க வேண்டும். அதன் மூலம் விரைவில் முழு நிவாரணத் தொகையை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் புயல் பாதித்த பகுதிகளில் மறு சீரமைப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பகுதி வாழ் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள்.

மத்திய குழுவினர் தங்களது ஆய்வினைச் சரியாக, முறையாக, முழுமையாக ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் தமிழகத்துக்கான நிவாரணத் தொகை முழுமையாக கிடைக்க வழி வகை செய்யவேண்டும்.இவ்வாறு வாசன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க