• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மது போதையில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய பெண் போலீஸ் கணவர் கைது

May 18, 2020 தண்டோரா குழு

மது போதையில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய பெண் போலீஸ் கணவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை போத்தனூர் நஞ்சுண்டாபுரம் அருகே தனியார் தோட்டத்தில் இரண்டு பேர் அமர்ந்து மது குடிப்பதாகவும், அப்பகுதியில் சாலையில் செல்வோரிடம் தகறாறு செய்வதாகவும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது.

இந்நிலையில் போத்தனூர் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்த போது, அங்கு மது போதையில் இருந்த மதன்குமார் என்பவர் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமாரை தறக்குறைவாக பேசி தாக்கி உள்ளார். இதையடுத்து மதன்குமார் கைது செய்த போலீஸார் அவர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

முதல் கட்ட விசாரணையில் தாக்கிய நபர் கோவையில் பணியாற்றும் பெண் போலீஸில் கணவர் என்பதும், தனது நண்பர் உதயகுமாருடன் தோட்டத்தில் மது குடிக்க வந்ததும் தெரியவந்தது.

மேலும் படிக்க