• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மதம் வைத்து அரசியல் செய்பவரை, பதம் பார்க்க வந்தவரே!-கோவையில் மக்கள் நீதி மய்யம் போஸ்டர்

November 7, 2022 தண்டோரா குழு

கோவை மாநகர பகுதியில் சமீப காலமாக போஸ்டர் கலாச்சாரம் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாஜக மற்றும் திமுகவினர் மாறி மாறி போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

இதே போல கோவை ரயில் நிலையம் பகுதியில் மத்திய மாவட்டம் மக்கள் நீதி மயத்தினர் நவம்பர் 7ல் பிறந்தநாள் காணும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் மனிதனை மனிதனா பாரு, மதங்களும் தன்னால ஓடும் எனவும், மதம் வைத்து அரசியல் செய்பவரை, பதம் பார்க்க வந்தவரே நம்மவரே! நீ வாழ்க பல்லாண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க