• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மசாஜ் செய்ய முடியாதா? தகராறில் கோவையில் பெண் மீது கத்தி குத்து

June 17, 2022 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூரில் மசாஜ் சென்டர் நடத்தி வருபவர் மினிமோள் (43).இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்.இவரது வீடு மசாஜ் சென்டர் அருகே உள்ளது.இந்நிலையில் இவரது வீட்டிற்கு சென்ற கெளசிக் என்பவர் மற்றும் அவரது நண்பர் ஒருவர் மினிமோளை மசாஜ் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளனர்.அதற்கு அவர் மசாஜ் சென்டர் வருமாறு கூறியுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த கெளசிக் மற்றும் அவரது நண்பர் மினிமோளை கத்தியால் தாக்கியுள்ளனர்.அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் உதவிக்கு வந்துள்ளனர். பின்னர் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் மினிமோள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க