• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மக்கள் வறுமையில் வாடுகையில் எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவையா?

August 4, 2017 தண்டோரா குழு

மக்கள் வறுமையில் வாடுகையில்எம் எல் ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவையா? சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகம் வறுமை, விவசாயி தற்கொலை, கல்விக்கட்டணம் செலுத்த முடியாதநிலையில் உள்ளதால் தமிழக எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி மதுரை ஐகோர்ட் கிளையில் ரமேஷ் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இம்மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை , தமிழகத்தின் நிலை குறித்து மனுதாரர் கூறியதை ஆதாரமாக தாக்கல் செய்யவில்லை. சட்டரீதியான கருத்துகள் முன் வைக்கப்படவில்லை எனக்கூறி, தள்ளுபடி செய்தது.

மேலும், எம்.எல்.ஏக்கள் ஊதிய உயர்வு அறிவிப்பு அரசின் நிர்வாக நீதியிலானது என்பதால் தலையிட முடியாது.தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு சரியா என எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பிக்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் வறுமையில் வாடுகையில்எம் எல் ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவையா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் படிக்க