March 25, 2019
தண்டோரா குழு
கோவை நாடாளுமன்ற தொகுதிக்காக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவரான மகேந்திரன் மக்கள் நீதி மய்ய வேட்பாளராக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,
நாளை முதல் பரப்புரையை துவக்குகிறோம். ஒரு மாதத்தில் மக்கள் நீதி மய்யத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. நேற்றைய பொதுக்கூட்டம் அதை உறுதிபடுத்தியுள்ளதாக்கியுள்ளது. கோவை தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிடுவோம் என்றார். அப்போது, மேற்கு மண்டல காவல்துறை அதிகாரி ஒருவர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக கமல்ஹாசன் கூறிய புகார் குறித்த கேள்விக்கு, இதுவரை புகார் அளிக்கவில்லை எனவும் இனிமேலும் தொடர்ந்தால் புகார் அளிப்போம் என கூறினார். இவரை தொடர்ந்து பொள்ளாச்சி மநீம வேட்பாளர் முகாம்பிகை ரத்னம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் பேட்டியளித்த அவர் , பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் , பொள்ளாச்சியில் மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் , இதற்கு எதிராக வலுவான குரல் எழுப்போம் என கூறினார்.