• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மக்கள் நடமாட்டம் இல்லாததால் கண்ணாடி போல் காட்சியளிக்கும் கோவை குற்றால அருவி !

June 29, 2020 தண்டோரா குழு

கொரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட கோவை குற்றலத்தில், மக்கள் நடமாட்டம் இல்லாததால் அருவி நீர் கண்ணாடி போல் காட்சியளிக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் உருவாகி நொய்யலில் கலக்கும் கோவை குற்றாலம் அருவி கோவையின் முக்கிய சுற்றுதலத்தில் ஒன்று. தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். பொதுவாக பள்ளி, கல்லூரி கோடை விடுமுறை நாட்களில் கோவை குற்றலாம் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 22 ஆம் தேதி கோவை குற்றலாம் மூடப்பட்டது. தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் கோவை குற்றாலம் அருவிக்கு செல்லும் தடை நீடித்து வருகிறது.

கோடை விடுமுறைகளில் மூடி இருந்த குற்றாலம் அருவி, மழைக்காலம் தொடங்கி உள்ள போது மூடப்பட்டுள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கோவை குற்றாலம் அருவி நீர் கண்ணாடி போல் காட்சியளிக்கிறது.மேலும் மக்கள் நடமாட்டம் இல்லாததால் வன விலங்குகள் அதிகளவு தண்ணீர் குடிக்க வரத்துவங்கி உள்ளது. மேலும் சட்ட விரோதமாக மக்கள் நடமாட்டம் உள்ளதா என கண்காணிக்க தினமும் வனத்துறை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க