• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்களைப் போராடத் தூண்டினால் குண்டர் சட்டம் பாயும்..! முதல்வர் எச்சரிக்கை

July 19, 2017 தண்டோரா குழு

மக்களைப் போராடத் தூண்டினால் குண்டர் சட்டம் பாயும்என முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகத் துண்டு பிரசுரம் வழங்கியதுக்காக மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர், அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், மாணவி மீது குண்டர் சட்டம் போடப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் சட்டபேரவையில் கேள்வி எழுப்பினர். அப்போது இதற்கு விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்ததாலும் வளர்மதி கைது செய்யப்பட்டார்.

2014-ம் ஆண்டு கல்லூரிக் கட்டணத்தைக் குறைக்கக்கோரிஅண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளை வளர்மதி போராட்டத்துக்குத் தூண்டினார். அதுதொடர்பாக அவர் மீது இரண்டு வழக்குகள் உள்ளன.

கடந்த மார்ச் மாதம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.அவரை விடுவிக்கக்கோரி வளர்மதி சாலை மறியலில் ஈடுபட்டார். அதுதொடர்பாகவும் அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்றார்.

மேலும், மக்களை தூண்டிவிட்டு கிளர்ச்சியை ஏற்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். மக்களை போராட தூண்டுவர்கள், மாணவ மாணவியர்களை அழைத்து போராட வைப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயம். மாணவர்கள் போராடினால் அவர்கள் படிப்பு கெடும் என எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

மேலும் படிக்க