• Download mobile app
11 Jun 2025, WednesdayEdition - 3409
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மக்களவைத் தேர்தல் முடியும் வரை தமிழகத்தில் போலீசாருக்கு விடுமுறை இல்லை

March 18, 2019 தண்டோரா குழு

மக்களவைத் தேர்தல் முடியும் வரை தமிழகத்தில் போலீசாருக்கு விடுமுறை அளிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

17-வது நாடாளுமன்றத் தேர்தல்இந்தியா முழுக்க மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி நெருங்கும் நேரம் என்பதால் பாதுகாப்பு கருதி மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை போலீசாருக்கு விடுமுறை அளிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சியினர் தேர்தல் பணியை தொடங்கி உள்ள நிலையில், போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையை 24 மணி நேரமும் தீவிரப்படுத்தவும் கண்காணிப்பில் ஈடுபடவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதனால், திருவள்ளூர்,காஞ்சி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பணியாற்றும் போலீசாருக்கு, தேர்தல் முடியும் வரை விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. துக்க நிகழ்ச்சிக்காக அவசர கருதியும் மட்டுமே போலீசார் விடுமுறை எடுக்க முடியும் அதற்கான காரணம் மற்றும் ஆவணங்கள் மூலம் மட்டுமே போலீசார் அந்த விடுமுறையை எடுக்க இயலும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க