• Download mobile app
12 Jun 2025, ThursdayEdition - 3410
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மகளிர் தினத்தன்று கோவை அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்திலேயே பிறந்த மூன்று பெண் குழந்தைகள்

March 8, 2019 தண்டோரா குழு

மகளிர் தினமான இன்று கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூலி தொழிலாளியின் மனைவிக்கு முதல் பிரசவத்திலேயே மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது பெற்றோர் மட்டுமின்றி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ்- சிந்து தம்பதியருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு திருமணம் நடந்துள்ளது.இதையடுத்து கடந்த ஆண்டு கர்ப்பமடைந்த சிந்து கோவை அரசு மருத்துவமனையில் மகப்பேறு கால சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனிடையே ஸ்கேன் பரிசோதனையில் மூன்று குழந்தைகள் கருவில் வளர்வது தெரியவரவே அதற்கேற்றபடி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் மகளிர் தினமான இன்று சிந்துவிற்கு மூன்று பெண் குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளன.இரண்டு குழந்தைகள் 1.75 கிலோ எடையிலும் ஒரு குழந்தை 1.5 கிலோ எடையிலும் பிறந்துள்ளதாகவும் மூன்று குழந்தைகளும் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாகவும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் அசோகன் தெரிவித்துள்ளார்.மேலும், கோவை அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்று ஒரே சமயத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தது இல்லை எனவும் சிக்கலான பல பிரசவங்கள் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க