• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மகளின் இறுதி சடங்கில் கலந்துக்கொள்ள விசா வழங்க அமெரிக்க அதிபருக்கு தந்தை கோரிக்கை

July 22, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட மகளின் இறுதி சடங்கில் கலந்துக்கொள்ள விசா வழங்கவேண்டும் என்று அந்த பெண்ணின் தந்தை அமெரிக்க அதிபருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க நாட்டின் நியூஜெர்சி நகரில் வசித்து வந்த 11 வயது சிறுமி அபிகெயில், அவளது அண்டை வீட்டுக்காரர் அண்ட்ரிஸ் எரசோ என்னும் 18 வயது இளைஞரால் குத்தி கொலை செய்யப்பட்டாள்.

கடந்த 2௦௦1-ம் ஆண்டு, அபிகெயிலின் தந்தை போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு, அமெரிக்க நாட்டிலிருந்து வெளியேற்றபட்டார். தற்போது தனது மூத்த மகளுடன் ஜாமைக்கா நாட்டில் வசித்து வருகிறார்.

அபிகெய்லின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க நாட்டிற்கு வர விசாவிற்கு விண்ணப்பித்து இருந்தார். ஆனால், விசா கிடைக்கவில்லை. இதையடுத்து, மகளில் இறுதி சடங்கில் பங்கேற்க, அமெரிக்க வர அனுமதி தரவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனாட் டிரம்புக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க