• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போலீஸ் துணைகமிஷனர் சரவணனின் கோரிக்கையை ஏற்ற சூர்யா ரசிகர்கள்

September 20, 2019 தண்டோரா குழு

சினிமா கட்அவுட், பேனர் வைப்பதற்கு பதிலாக 200 பேருக்கு ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சியை போலீஸ் துணைகமிஷனர் சரவணன் துவக்கி வைத்தார்.

சென்னையில் திருமண நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்ட அரசியல் கட்சி பேனர் ரோட்டில் விழுந்ததில், இளம்பெண் சுபஸ்ரீ பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் தொண்டர்களுக்கும் நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கும் இனி பேனர்கள் வைக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையில், சினிமா தியேட்டர்களில் கட்அவுட், பேனர்கள் வைப்பதற்கு பதிலாக ரசிகர் மன்றத்தினர் ஹெல்மெட் வழங்கினால் விழிப்புணர்வாக இருக்கும் என நெல்லை போலீஸ் துணைகமிஷனர் சரவணன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று சூர்யாவின் காப்பான் படம் வெளியானது. இதையடுத்து, துணைகமிஷனரின் கோரிக்கையை ஏற்ற நடிகர் சூர்யா ரசிகர் மன்றத்தினர் தியேட்டரில் பேனர்கள் வைப்பதற்கு பதிலாக, 200 நபர்களுக்கு ஹெல்மெட் வழங்கினர். அதனை துணைகமிஷனர் சரவணன் வழங்கினார்.

மேலும் படிக்க